Saturday, May 31, 2014

தோசை நடுவில் ஏன் ஓட்டை இருக்கு ?

ஏன் ?

அதைச் சுடுகிறார்கள் 

டாக்டர், பயங்கர முதுகுவலி... என்ன பண்ணலாம்...?தைலம் அப்ளை பண்ணுங்க...

அப்படியும் வலி போகலேன்னா...?

லீவுக்கு அப்ளை பண்ணுங்க. 

திருடன்: மரியாதையா பீரோ சாவியைக் கொடு...இல்லத்தரசன்: இதையேதாம்ப்பா நான் கல்யாணம் ஆனதுலேர்ந்து என் வீட்டுக்காரிகிட்டே கேட்டுக்கிட்டிருக்கேன் 

நேத்து ஆபீஸிலிருந்து வீட்டுக்குப் போகும்போது பக்கத்து வீட்டுக்குப் போயிட்டேன் அப்புறம் ?
களைப்பா வந்திருப்பீங்க... காபியோட வரேன்-னு குரல் கேட்டது.
சரி, நம்ம வீடு இல்லைன்னு புரிஞ்சுகிட்டேன்...========= 

என்ன இப்பெல்லாம் மானேஜர் உன்னைப் பார்த்து இளிக்கறதில்லை...?நீங்க சிரிக்கும்போது எங்க தாத்தா மாதிரி இருக்கீங்கன்னு சொன்னேன்========== 

டாக்டர்... உங்களைக் கைராசி இல்லாதவர்னு வெளில பேசிக்கிறாங்களே... உண்மையா...?

ஏன் கேட்கறீங்க ?

என் மாமியாரை உங்ககிட்டே அட்மிட் பண்ணலாம்னு இருக்கேன் 

அவருக்கு மறதி அதிகமாயிடுச்சுனு எப்படிச் சொல்றே ?கதவில் சாவியை மாட்டிட்டு பூட்டை எடுத்துட்டுப் போறாரே! 

டாக்டர்;தினமும் ஒரு வேலை கஞ்சி தான் குடிக்க வேண்டும்.
நோயாளி:எத்தனை நாளைக்கு டாக்டர்?
டாக்டர்:என்னிடம் செய்து கொள்ளும் வைத்தியத்திற்கு பணம் கொடுக்கும் வரை.
நோயாளி:கஞ்சி சாப்பிடுவதற்கும்,பில் தொகை  கொடுப்பதற்கும் என்ன சம்பந்தம்,டாக்டர்?
டாக்டர்:அப்போதுதானே என் பில் தொகை கொடுக்க உங்களிடம் பணமிருக்கும்? 

உன் பையனுக்கு ஏன் ரொம்ப குண்டா பெண் பார்க்கறே ?

அவளைத் தலையில தூக்கி வெச்சுக்கிட்டு ஆட முடியாது பாரு 

யோவ், யாருய்யா ஆபரேஷன் தியேட்டர் வாசல்லே சூஸைட் பாயிண்ட்-னு எழுதி வெச்சது ? 

டாக்டர், மாடி மேல கிளினிக் வெச்சிருக்கீங்களோ ?

அதனாலே என்ன ?

மேலே போகும் வழி-னு போர்டு வேற வெச்சிருக்கீங்களே... பேஷண்ட்ஸ் எப்படி வருவாங்க ? 

. எல்லா மெகா சீரியல்-களிலேயும் பழைய நடிக, நடிகைகளையே போடறாங்களே. .. ஏன் ?

அவங்கதான் இப்ப மெகா சைஸ்ல இருக்காங்க 

தலைவர் பாக்கெட்ல பேனா வைக்கறதுக்குப் பதிலா எதக்கு ஸ்டாம்ப் பேட் வெச்சிருக்கார் ?

கை நாட்டு வைக்கதான். 

அந்த ஏலக்காரருக்கு மூணு பொண்டாட்டி?

அதெப்படி கண்டுபிடித்தீர்கள்?

ஒரு தரம், ரெண்டு தரம், மூணு தரம்ணு சொல்வதற்குப் பதிலா ஒரு தாரம், ரெண்டு தாரம், மூணு தாராம்னு சொல்றாரே? 

கணவன்: ஆபிரேஷன்ல நான் இறந்து போயிட்டா...
நீ அந்த டாக்டரையே
கல்யாணம் பண்ணிக்கோ

மனைவி: ஏங்க இப்படியெல்லாம் பேசுறீங்க?

கணவன்: பின்னே... டாக்டரை நான்
எப்படிப் பழிவாங்குறது? 

‎"திடீர்னு என் மாமியாருக்கு
வலிப்பு வந்துடுச்சு.."

"உடனே சாவிக்கொத்தைக் கையில
கொடுத்துட்டியா?"

"அவ்வளவு மடச்சியா நான்..
சூடா இருந்த இரும்புக் கரண்டியைக்
கொடுத்துட்டேன்" 

நம்ம அப்பா முட்டாளாம்மா?"

"எதுக்குடா இப்படி கேகிறே?"

"எங்க வாத்தியார் என்னை
முட்டாப் பய மவனேன்னு திட்டுறாரே" 

ஓவராக சரக்கடித்துவிட்டு போதையில், வீட்டின் அருகில் இருந்த கிணற்றில் விழுந்தவன் சொன்னான்..
"ஆல் இஸ் வெல்" ! 

கடவுள்: பக்தா, நீ வேண்டும் இரண்டு வரம் கேள்!

மனிதன்: சாமி, அடுத்த ஜென்மத்துலயும் என் மனைவிக்கு நல்ல கணவன் அமையணும்

கடவுள்: சரி, தந்தோம். இன்னொன்று?

மனிதன்: சாமி, அடுத்த ஜென்மத்துலயாவது எனக்கு நல்ல மனைவி அமையணும் 

கணவன் : ச்சீய்! காப்பியாடி இது? நாய்கூட இதை குடிக்காதுடி.

மனைவி : ஆமாங்க! அதனாலதான் நம்ம நாய்க்கு ஹார்லிக்ஸ் போட்டு வச்சுருக்கேன்.

கணவன் : ????!!!! 

‎"'படிதாண்டா பத்தினி'னு அவர் சொன்னப்ப எனக்கு மொதல்ல புரியலை."

"அப்பறம்?"

"தெனமும் வீட்டுக்காரம்மா கிட்ட அடி வாங்கி வாசல் படிதாண்டா கதின்னு கிடப்பார்ன்னு போய்ப் பார்த்தப்பதான் புரிஞ்சது" 

உலக அழகிப் போட்டியில கலந்துக்கிட்ட ஒரு பொண்ணு தோத்துப்போனது தெரிஞ்சதும் பயங்கரமா அழுதுக்கிட்டே இருந்தாளாம்.

ஐயையோ... அப்புறம்...?

உலக அழுகின்னு பட்டம் கொடுத்துட்டாங்க

நான் இப்ப தினமும் வாக்கிங் போறேன்னா, அதுக்கு நம்ம டாக்டர்தான் காரணம்.

ஏன்... ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா..?

நீ வேற... முதல்ல கார்ல வந்துட்டிருந்தேன். ட்ரீட்மெண்ட்டுக்குச் செலவு செஞ்சு செஞ்சு, இப்ப நடக்கும்படி ஆயிடுச்சு 

மனைவி :  "எதிர்த்த வீட்டுக்காரரு அவரோட மனைவிக்கு தினமும் ஒரு புடவை வாங்கித் தரார். நீங்களும் இருக்கீங்களே"

அவர்:  "எனக்கும் வாங்கிக் குடுக்கலாம்னு ஆசைதான். ஆனா அவங்க வாங்கிக்குவாங்களோ மாட்டாங்களோன்னுதான் பயமாயிருக்கு"  

ஏய்யா... கிழிஞ்ச ரூபாய் நோட்டு கொடுக்கறே... இது செல்லாது... வேற கொடு

நீ மட்டும் டிக்கெட்டைக் கிழிச்சிக் கொடுக்கிறீயே... அது மட்டும் செல்லுமா ? 

உங்களுக்கு ஜோசியத்துல நம்பிக்கை இருக்கா. .?

கண்டிப்பா இருக்கே.


அப்ப ஒரு ஆயிரம் ரூபா கடன் கொடுங்க.

அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் ?

அடுத்த வாரம் லாட்டரில எனக்கு லட்ச ரூபாய் பரிசு விழும்னு ஜோசியர் சொல்லி இருக்காரே 

தூங்கறதுக்கு முன்னால எல்லாரும் என்ன செய்வாங்க ?

என்ன செய்வாங்க ?

முழிச்சிருப்பாங்க===== 

டேய், நான் திருடன்... மரியாதையா எடு பர்ஸை

டேய், நான் போலீஸ்காரன்... மரியாதையா எடு மாமூலை 

திருடன் நேத்து ராத்திரி உங்க வீட்ல திருடும்போது நீங்க முழிச்சிக்கிட்டு இருந்ததா சொல்றீங்க... அப்படின்னா ஏன் சத்தம் போடல ?
சத்தம் போட்டா நாம மாட்டிக்குவோம்னு வேலைக்காரி என் வாயப் பொத்திட்டாய்யா! 

டாக்டர்... ஆபரேஷன் பண்றதுக்கு முன்னால என் பொண்ணுக்கு ஏன் மயக்கமருந்து கொடுக்கலை ?

உங்க பொண்ணை நான் மயக்கிட்டதா யாரும் சொல்லிடக்கூடாது பாருங்க 

தலைவருக்கு, எதுஎதுக்குத்தான் ஜோசியம் பார்க்குறதுன்னு விவஸ்தை இல்லாமப் போச்சு...

என்னாச்சு ?

வருகிற தேர்தலில் தனக்கு எத்தனை கள்ள ஒட்டு விழும்ன்னு கேட்குறாரே========== 

 ஐய்யா சாப்பாட்டைக் கண்ணால பார்த்து நாலு நாள் ஆச்சுங்க.. .
ஒரு அஞ்சு நிமிஷம் இரு... இப்ப நான் சாப்பிடப் போறேன்... பார்த்துட்டுப் போய்டு 

''நாய் பற்றிய கட்டுரை எழுதி வரச் சொன்னால்,நீயும் உன் அண்ணனும் ஒரே மாதிரி எழுதி வந்திருக்கிறீர்களே?''
என்று ஆசிரியர் ஒரு மாணவனிடம் கேட்டார்.
அவன் சொன்னான்,''எங்கள் வீட்டில் ஒரு நாய் தானே சார் இருக்குது.'' 

''வெங்காய வேனும் பெருங்காய வேனும் மோதினதில் வெங்காய வேன் வெங்கையாவுக்கு பெருங்காயம்!'' 

. ஏன் ... உன் வீட்டுக்காரர் புடவையெல்லாம் போட்டுட்டுப் பாத்திரம் வாங்கிக்கோனு சொல்றாரு .. ..?

புடவையைத் தோய்க்கறதைவிட, பாத்திரம் தேய்க்கறது அவருக்கு ரொம்ப சுலபமா இருக்காம். 

டாக்டர் கல்யாணமாகி எட்டு வருஷமாகியும் என் மனைவி வயத்துல ஒரு புழு பூச்சிகூட இல்லை.

வெரிகுட். நல்ல ஆரோக்கியமான உடம்புனு சொல்லுங்க. 

ஐயா இல்லீங்களா...? தீபாவளி இனாம் வேணும்!

ஐயாவும் தீபாவளி இனாம் வாங்கத்தான் அடுத்த தெருவுக்குப் போயிருக்காரு. 

மூணு யானை கர்ப்பமா இருக்குது, அதுல ஒண்ணுக்கு பன்னிரண்டு மாசம். இன்னொண்ணுக்கு பதினாறு மாசம். கடைசி யானை இருபது மாசம். இதுல எந்த யானை முதல - குட்டி போடும்.

கடைசி யானைதான்

தப்பு. எதுவுமே முதலைக் குட்டி போடாது. எல்லாமே யானைக் குட்டிதான் போடும். 

அந்த ஆஸ்பத்திரியில ஆறாம் நம்பர் ரூமும், நூறாம் நம்பர் ரூமும் ஆபரேஷன் தியேட்டர்...

ஆறுலேயும் சாவு.. நூறுலேயும் சாவுன்னு சொல்லுங்க. 

டாக் டர்...............(தன்னிடம் வந்த நோயாளியைப் பார்த்து)........... நீங்கள் எதையும் மறைக்காமல் வெளிப்படையாக என்னிடம் கூற வேண்டும். அப்போது தான் உங்களுக்கு என்ன வருத்தம் என கூற முடியும்.

நோயாளி.........."ஆமா டாக் ட ர். நான் ரொம்ப நாளா உங்க Secretary  கமலாவைக் காதலிக்கிறேன்."

டாக் ட ர்.............????????????????????? 

நம்ம கணக்கு வாத்தியாருக்கு
அறிவே இல்லடி?"

"எத வச்சு சொல்றே?"

"அவரோட நாலாவது பொண்ணுக்கு
�அஞ்சு� ன்னு பேரு வச்சிருக்காரே" 

போருக்குப் போகும்போது கிரீடம், வாள் உறை,
மார்புக்கவசம் எதுவும் வேணாங்கறீங்களே... ஏன் மன்னா?"

"நாப்பது அம்பது கிலோவை சுமந்துக்கிட்டு
எப்படிய்யா வேகமா ஓடி வர முடியும்?" 

மனைவி:- நேற்று நான் பார்த்து முழுக்க முழுக்க ஓர் நகைச்சுவை படம்.
சிரித்து சிரித்து பாதி உயிர் போய்விட்டது.

கணவன்:-
இன்னும். ஒரே ஒரு தடவை அந்தப்படத்தைப் போய் பாரேன் 

நீதிபதி :
"வாடகைக்கு குடியிருந்த வீட்டை
எதற்கு இடித்தாய்?"

குற்றவாளி:
"வீட்டு ஓனர்தான் விடியுறதுக்குள்ள
வீட்டைக் `காலி`பண்ணுனு சொன்னார்
யுவர் ஆனர்" 

திருடனைக் கண்டதும் பாகவதர்
கூச்சல் போட்டிருக்காரே...
அக்கம்பக்கத்து வீட்டுக்காரங்க
ஒருத்தரும் எட்டிப்பார்க்கவே
இல்லையாமே, ஏன்?"

"கச்சேரிக்காக பிராக்டீஸ்
செய்யறார்னு நெனைச்சுட்டாங்களாம்" 

மனைவி:"ஏன் இப்படி பேயடிச்சமாதிரி
இருக்கிறீங்க?"
கணவன்:"கொஞ்ச நேரத்துக்கு முன் நீதானே
அடித்தாய்" 

‎"ரொம்ப சிரமமா இருக்கு டாக்டர்..."

"எது?"

"நர்ஸை சிஸ்டர்னு கூப்பிடுறது...!" 

என் மனைவி நான் கூப்பிட்டா எங்கிருந்தாலும் ஒடி வந்துடுவாஇப்ப எங்க இருக்காங்க ?

குளிச்சுகிட்டு இருக்காகூப்பிடுங்களேன் பார்ப்போம் 

சின்ன ஆபரேஷன்தான்... பயப்பட வேண்டாம்

.டாக்டர் பெரிய ஆபரேஷன்னு சொன்னாரே...?

டாக்டருக்கு இது பெரிய ஆபரேஷன்! 

 அந்த டாக்டர் பேஷண்ட்டுகிட்டே நைஸh பேசி, ஐஸ் வெச்சு ஆபரேஷனுக்கு முன்னாடி ஃபீஸை வாங்கிடுவாரு!

ஏன் அப்படி..?

ஆபரேஷனுக்கு அப்புறம்னா, அவரால ஐஸ் மட்டும்தான் வைக்க முடியும்... ஃபீஸை வாங்க முடியாதே 

 கழுதைக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம் ?என்ன வித்தியாசம் ?

மனிதனைக் கழுதைன்னு கூப்பிடலாம். கழுதையை மனிதன்னு கூப்பிட முடியாது 

எங்க மானேஜருக்கு ஆபீஸ்ல திடீர்னு பெண்டாட்டி ஞாபகம் வந்தா போதும்.. .

உடனே வீட்டுக்கு கிளம்பிடு வாரா.. .?

இல்ல ஆபீஸ்ல எல்லார் மேலயும் எரிஞ்சு விழுவாரு 

தலைவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தது தப்பாப் போச்சு

ஏன் ?

நர்ஸிங் ஹோம் வெச்சுத்தரச் சொல்லி பிடிவாதம் பண்றாரு.=

No comments:

Post a Comment