Saturday, May 31, 2014

சிரி சிரி சிரிசிரி சிரி ஜோக்ஸ்

சிரி சிரி சிரிசிரி சிரி ஜோக்ஸ் !!!

சிரி சிரி சிரிசிரி சிரி சிந்திக்கத் தெரிந்த மனித இனத்திற்கே சொந்தமான கையிருப்பு சிரி சிரி  சிரிசிரி சிரி.
 னைவருக்கும் வணக்கம் . நாம் ஒவ்வொருவரும் நமது வாழ்வில் என்னதான் பணம் , பதவி , உறவுகள் என்று எல்லாம் நம்மிடம் இருந்தாலும் விலைகொடுத்து வாங்க இயலாத பல விஷயங்கள் இருக்கின்றன . அதில் ஒன்றுதான் மகிழ்ச்சி . நாம் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் ஒரு நிமிடத்தில் கோபப்பட வைத்துவிடலாம் . ஆனால் அதே நபரை அந்த ஒரு நிமிடத்திற்குள் நாம் மீண்டும் சிரிக்க வைப்பது என்பது இயலாத ஒன்று .அதுதான் கோபத்திற்கும் சந்தோசத்திற்கும் இடையில் உள்ள ஒரு மிகப்பெரிய வித்தியாசம் . இன்னும் நம்மில் பலர் இருக்கிறார்கள் ஒரு நாள் முழுவதும் நகைச்சுவை படம் பார்ப்பார்கள் ஆனால் ஒரு முறை கூட சிரிக்க மாட்டார்கள் . அதே நபர் ஒன்றும் இருக்காது யாரேனும் அவருக்கு வேண்டாத ஒருவர் போகிற வழியில் எதிர் பாராமல் கீழே விழுந்திருப்பார் அதை பார்த்து இடைவிடாமல் சிரித்துக் கொண்டிருப்பார்கள் . இப்படி ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு வகையில் தினம்தோறும் நம் இதழ்களில் புன்னகை என்ற மலர்களை உதிர்துகொண்டுதான் இருக்கின்றோம் . அதுபோல் எனக்கும் சில நகைச்சுவை துணுக்குகள் ஒரு மடலின் வாயிலாக கிடைக்கப் பெற்றேன் . இதோ உங்களின் இதழ்களிலும் புன்னைகை மலர்களை நட்டுவைக்க அந்த நகைசுவை துணுக்குகள் .
னைவி: ஏங்க… கொஞ்சம் வாங்க… குழந்த அழுவுது…
ணவன்:  அடி செருப்பால! … உன்னை எவண்டி மேக்-அப் இல்லாம குழந்தைப் பக்கத்துல போக சொன்னது?
ல்ப் – எடிசன்
ரேடியோ – மார்கோனி
பை-சைக்கிள் – மேக் மில்லன்
போன் – க்ராஹாம் பெல்
க்ராவிடி – நியூட்டன்
கரண்ட் – பாரடே
எக்ஸாம் – அவன்தான் சிக்க மாட்றான்! சிக்கினா செத்தான்!!
ன்பத்திலும் சிரிங்க! துன்பத்திலும் சிரிங்க! எல்லா நேரமும் சிரிங்க! அப்பத்தான் நீங்க
லூசுன்னு எல்லாரும் நம்புவாங்க.
மாடு போல சின்னதா இருக்கும்! ஆனா அது மாடு இல்ல! அது என்ன?
என்ன தெரியலையா?
அது கண்ணுக் குட்டி! கடவுளே ஏன் என்னை இவ்வளவு அறிவாளியாப் படைச்சே?
தினமும் உன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறியே.. அவ்வளவு பாசமா மனைவி மேல?
மாப்ளே! பாசம் மனைவி மேலே இல்லடா… பூக்காரி மேல!
ப்பா: ஏண்டா உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிகிட்டு இருக்குற?
கன்: எங்க ஸ்கூல்’ல நாளைக்கு நீளம் தாண்டுற போட்டி இருக்கு. அதுக்கு தான் பிராக்டீஸ் பண்ணி கிட்டு இருக்கேன்.
நான் ஒன்னு சொல்லுவேன்… எழுந்திருச்சு ஓடக்கூடாது…
சொல்லட்டுமா?
பெருமாள் கோவில்’ல சுண்டல் போடுறாங்க…
ஹே…ஹே.. நில்லுங்க… எங்க ஓடுறீங்க?….
னி இங்கு  எப்பொழுதும் ஒலித்துகொண்டே இருக்கும் இந்த சிரிப்பு சந்தம் மீண்டும் மீண்டும் இனி வரும் நாட்களிலெல்லாம் .
ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.

No comments:

Post a Comment